பிரிகேடியர் பால்ராஜ் நினைவுப் பாடல்
20.05.08 அன்று மாரடைப்பில் காலமாகிய, போராளியும், களம்பல கண்ட விடுதலைப் புலிகளின், முக்கிய தளபதிகளில் ஒருவருமாகிய பிரிடிகேயர் பால்ராஜ் அவர்களின் நினைவாக வெளிவந்திருக்கும் பாடல். " தானைத் தளபதியே, தமிழீழத்தின் காப்பரனே பால்ராஜ் அண்ணா.."
பாடல் வரிகள், இசை, பாடியவர் : வர்ண. இராமேஸ்வரன்.
வெளியீடு: கலைப்பண்பாட்டுக்கழகம் . கனடா
சென்று வா வீரனே !
Posted byமலைநாடான் at 2 comments
Labels: அஞ்சலி, ஈழத்துக்கலைஞன். ஈழத்துப்பாடல்
"தண்ணீர்" தலைப்பில் பத்துக் குறும்படங்கள்.
மின்னஞ்சலில் வந்த இணைப்பில் சென்று பார்த்தால், மலேசியாவில் BMW நிறுவனம் நடாத்திய குறும்படப்போட்டியில் பத்துப் படங்கள் இறுதித் தெரிவில் தெரிவாகி, வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருக்கிறது. அதிலே இரண்டு தமிழ்மொழியிலான படங்கள். Broken Bangles, Sing in the Rain என்ற அந்த இரண்டு படங்களிலும், முதலவாது சுகமான கமெராக்கவிதை. இதில் பங்காற்றியவர்களைப் பாராட்டலாம். நீங்களும் படங்களைப் பார்க்க விரும்பின், இங்கே செல்லுங்கள். பார்த்தபின் மறக்காது வாக்களியுங்கள்.
Posted byமலைநாடான் at 3 comments
Labels: அறிவிப்பு, ஒளிப்பதிவு