"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

குறும்படப்போட்டி - மீள் அறிவிப்பு

கு(றும்)றள் படப்போட்டி. (போட்டி முடிவுத் திகதி பிற்போடப்பட்டுள்ளது)

வணக்கம் நண்பர்களே!
போட்டிக்கான அறிவித்தல் ஏற்று, இதுவரையில் 14 பேர்கள் முறையாக விண்ணப்பித்திருக்கின்றார்கள். இருப்பினும் மேலும் சிலர் கால அவகாசமிருப்பின் மேலும் சிலர் கலந்துகொள்வார்கள் என்பதாலும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும், சிறப்பாக இப்போட்டியில் கலந்து கொள்ளும் வகையிலும், போட்டிக்கான முடிவுத் திகதியினை மேலும் ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். இந்த அவகாசத்தை பயன்படுத்தி மேலும் பல நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்.
இனிப்போட்டிக்காக நாம் ஏற்கனவே அறியத் தந்திருந்த விபரங்கள்.

ஊடகத்துறையும், தொலைத்தொடர்பும், வளர்ந்துள்ள இந்தக்காலப்பகுதியில், நாமும், நமது சமூகம் சாரந்து, அதைச் சரிவரப் பன்படுத்தி பலன்பெறலாமே எனும் நல்நோக்கோடு, இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சியைத் தயாரித்துவழங்கும் கானம் கலைக்கூடமும், இணையப்பரப்பிற்கு வெளியேயுள்ள சில நண்பர்களும் இணைந்து, இப்போட்டியை நடாத்துகின்றார்கள். போட்டியில் தெரிவாகும் முதல் மூன்று படங்களுக்கு, சிறப்புப் பரிசுகள் வழக்கபடும். இதற்குத் தொடர்பாளானாக நான் செயற்படுகின்றேன்.

எல்லோர்க்கும் எட்டாக்கனியாக இருந்த பல தொழில்நுட்பங்களும், விஞ்ஞானத்தின் அபரிமித வளர்ச்சியால், இலகுவாக எம் பாவனைக்கு வந்துள்ளது. இந்தவகையில், கருத்தைக்காட்சியாகத் தரும் ஒளிப்படத் துறைசார்ந்த பல்வேறு வடிவங்களில், குறும்படம் எனும் பகுப்பு எங்கள் ஆர்வங்களுக்கு வடிகாலாக வருகிறது. இரண்டுவரிகளில் இணையற்ற கருத்துக்களை வழங்கும் தமிழ்மறையாம் திருக்குறளினைப் போன்று, மிகக்குறைந்த நேரத்தில் கருத்தை வலியுறுத்தும் இவ்வடிவத்தில் நடாத்தப்படும் இப்போட்டியை குறள்படப்போட்டி என விழித்தோம்.
இதில் நீங்கள் கூடக்கலந்துகொள்ளலாம். உங்களிடம் எண்ணமும் விருப்பும் இருக்கிறது. ஆனால் ஒளிப்படக்கருவியெல்லாம் இல்லை என ஏங்குகின்றீர்களா? உங்களிடம் தெளிவுறப் படம்பிடிக்கக்கூடிய கருவியுள்ள செல்லிடத்தொலைபேசியிருந்தால், அதன் மூலம் கூடப் படமாக்கி, முயற்சிக்கலாமே. இதைப் படமாக்கவும், தொகுக்கவும், கொஞ்சம் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் போதும். தேவையான சில மென்பொருட்கள் (உதாரணமாக: தொலைபேசியில் எடுக்கும் படங்களை கோப்புக்களாக மாற்றுவதற்குரிய மென்பொருட்கள்)இணையத்தில் இலவமாகவே தரவிறக்கம் செய்யமுடியும். இன்னும் என்ன தாமதம் உடனே உங்கள் பெயர்களை முலில் பதிவு செய்யுங்கள். பின் படைப்பினை அனுப்புங்கள். எல்லாம் ஒரு முயற்சிதானே..?
போட்டிக்கான விதிமுறைகள்.

தலைப்பு: வானமே எல்லை. உங்களுக்கு விருப்பமான எந்தவொரு
விடயத்தைப்பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால் அவை எமது
சமூக முன்னேற்றங் குறித்ததாகவிருப்பது விரும்பத்தக்கது.
அரசியல், பாலியல்உறவு, சம்பந்தமான கருப்பொருட்கள்
உள்ளடக்கிய படைப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

நேரம்: 1 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.

கோப்பு: MPEG கோப்புக்களாகவும் 5 MB மேற்படாதவகையிலும்
இருக்கவேண்டும்.

போட்டி முடிவுத் திகதி: 30.05.2007 க்கு முன் படைப்புக்கள் அனுப்பி
வைக்கப்படவேண்டும்.

போட்டி முடிவுகள்: 14.06.007 அறிவிக்கப்டும்.

படைப்புக்கள் யாவும், முடிவுத்திகதிக்கு முன்னதாக மின்மடல் மூலம் அனுப்பி வைக்கவேண்டும். ஒருவர் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். படைப்புக்கள் முன்னர் எங்காவது வெளியிடப்பட்டதாக இருக்கக் கூடாது. போட்டியில் கலந்துகொள்ளத் தெரிவுக்குழுவினரால் தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும், கானம் கலைக்கூடத்தினரால் இணையத்தில் காட்சிப்படுத்தப்படும். அதற்கான ஒப்புதலுடனேயே, படைப்பாளர் தமது படைப்புக்களை அனுப்ப வேண்டும். போட்டி குறித்த எந்தவொரு நேர்முகத்தொடர்புகளும் மேற்கொள்ளப்படமாட்டாது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

நீங்களும் பதிவு செய்யலாமே...
பதிவு செய்ய: ganam.team@gmail.com
போட்டியில் கலந்து கொள்வதற்கு வேண்டிய சில வழிமுறை உதவிகளை அறிந்துகொள்ள இங்கே வாருங்கள்.
இதுவரையில் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருப்பவர்கள்:-
..
peter selvaraj

ruban thanam

SABESAN THANGATHURAI

kathiravetpillai mohanadas

Sharveswara Rahulnath

arunasalam chandaramohan

Sundar rajan

sriekantharaja yogaraj

saravana veluswamy

blog biththan

Trichy-Ao

Chandra sekaran

panchaligam sajeerthan

Keerthi
ஆர்வத்துடன் பதிவு செய்து கொண்ட நண்பர்களே! இவ் அறிவிப்பு நிச்சயம் உங்களுக்கும் மகிழ்ச்சி தரும் என்று நம்புகின்றோம். உங்கள் ஆர்வத்துக்கும், தொடர்புக்கும் நன்றி.

Posted byமலைநாடான் at 4 comments  

இணையத்தில் இன்பத்தமிழ் 14

வணக்கம் நண்பர்களே!

ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.

இணையப்பரப்பில் தமிழின் பயன்பாடென்னும் தொடர்சிந்தனைப் பகுதியில், முனைவர் நா. கண்ணன் அவர்கள் வழங்கிய இணையத்தமிழைக் கணனியில் எழுதும் முறைபற்றிய உரையாடலின் இறுதிப்பகுதி.


ஈழத்துக் கவிஞர் சேரன் அவர்களின் கவிவரிகளில் உருவான பாடல்.

இவ்வார அறிமுகத்தில், ஈழத்தில் பிறந்து, புலத்தில் தமிழால் கலைகளும், கவிதைகளும் படைக்கும் இளைஞி நித்தியா அவர்களும், அவரது சுடுவானம் வலைப்பதிவும் . கூடவே நித்தியாவின் அழகான குரலில் வரும் அருமையான அவரது கவிதைகளும். கவிதைகளை நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ள அனுமதி தந்த நித்தியாவிற்கு நன்றி.

இவ்வார நிகழ்ச்சியினை அலங்கரிக்கின்றன.

நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவிய நண்பர்கள் அனைவர்க்கும் , அதுபோல் நிகழ்ச்சி குறித்து கருத்துக்கள் தந்து நெறிப்படுத்தும் நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.


நிகழ்ச்சியைக் கேட்க :-

இணையத்தில் இன்பத்தமிழ் 14.mp...






இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையில் உள்ள செயலியும் கேட்கலாம்.

Posted byமலைநாடான் at 5 comments  

இவர் என்ன சொன்னார் ?

ஏதாவது புதிதாக முயற்சிக்கலாமே என்ற எண்ணத்தில் பிறந்தது இவ் ஒளிப்பதிவு. அசைபடத்தில் முயற்சிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே எண்ணியிருந்தேன். படத்தில் வருபவர் பலாலியில் நிற்கிறார். அவர் என்ன சொன்னார் என்பது, புலிகளின் விமானச் சத்தத்தில் எனக்குக் கேட்கவில்லை. உங்களுக்கு கேட்டிருந்தால், அல்லது உங்களால் ஊகிக்க முடிந்தால் சொல்லுங்களேன்.


இது ஒரு பரீட்சார்த்த முயற்சி.

Posted byமலைநாடான் at 10 comments  

இணையத்தில் இன்பத்தமிழ் 13

வணக்கம் நண்பர்களே!

ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய, "இணையத்தில் இன்பத்தமிழ்"வாரந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.

இணையத்தமிழ் தொடர்பான சிந்தனைத் தொடரில், கணினியில் தமிழில் எழுதுவது பற்றிய முனைவர் நா.கண்ணன் அவர்களின் ஒலிப்பத்தியின் மூன்றாம் பகுதி,

தமிழ்நதியின் கடவுளும் நானும் கவிதை,

இவ்வார அறிமுகத்தில், அவுஸ்திரேலியாவிலிருந்து வலைப்பதிவு செய்யும், பதிவர்: கனக. சிறிதரன் அவர்களும், அவரது தமிழ்வலையின் மினி நூலகம் வலைப்பதிவும், பற்றிய அறிமுகக் குறிப்பு,

சிஞ்சாமனுசி கலையகத்தின் ஒலிக்கோப்பில், கனடாவிலிருந்து வலைப்பதிவுலகில் நன்கறியப்பட்ட பெண்பதிவராகிய, சிநேகிதியின் ஒலிப்பதிவில் வந்த இசையும் கதையும் , ஆகியன இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் தங்கள் ஆக்கங்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதி அளித்த அத்தனை நட்புள்ளங்களுக்கும் நன்றி.

நிகழ்ச்சியைக் கேட்டு, உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

நிகழ்ச்சியைக் கேட்க:

இணையத்தில் இன்பத்தமிழ் 13.mp...



இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலிருக்கும் செயலியிலும் கேட்கலாம்.

Posted byமலைநாடான் at 6 comments  

இணையத்தில் இன்பத்தமிழ் 12

வணக்கம் நண்பர்களே!

ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய, "இணையத்தில் இன்பத்தமிழ்" நிகழச்சியின் ஒலிப்பதிவிது.

இணையத்தமிழ் குறித்த தொடர் சிந்தனைப் பகுதியில், கணனியில் தமிழில் தட்டெழுத்துவது பற்றிய நா.கண்ணன் அவர்களின் உரைத்தொடரின் இரண்டாம் பகுதி.

வி.ஜே. சந்திரனின் பதிவிலிருந்து மகாகவியின் பாடல்.

இவ்வார அறிமுகத்தில் மூத்த வலைப்பதிவர் ஐயா இராம.கி அவர்களைப்பபற்றியும், அவரது வளவு வலைப்பதிவு பற்றிய சிறுகுறிப்பு.

சயந்தனின் சாரல் வலைப்பதிவிலிருந்து, ஈழத்தமிழ் அகதிகள் குறித்த இந்திய அரசு, மற்றும் ஊடகங்களின் போக்குக் குறித்த ஒரு விமர்சன நோக்கிலான உரையாடல்.

ஆகியன, இவ்வார நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.

தங்கள் பதிவுகளிலிருந்த விடயங்களை நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ள அனுமதி தந்த வலைப்பதிவு நண்பர்களுக்கும், நிகழ்ச்சி சிறப்புற அமைய உதவிய மற்றைய நண்பர்களுக்கும் நன்றி.

நிகழ்ச்சியைக் கேட்க

இணையத்தில் இன்பத்தமிழ் 12.


இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலுள்ள செயலியிலும் கேட்கலாம்.

Posted byமலைநாடான் at 6 comments  

குறும்படப்போட்டி - அறிவிப்பு

கு(றும்)றள் படப்போட்டி. போட்டி முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
விபரங்களுக்கு இங்கே வாருங்கள்

வணக்கம் நண்பர்களே!
ஊடகத்துறையும், தொலைத்தொடர்பும், வளர்ந்துள்ள இந்தக்காலப்பகுதியில், நாமும், நமது சமூகம் சாரந்து, அதைச் சரிவரப் பன்படுத்தி பலன்பெறலாமே எனும் நல்நோக்கோடு, இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சியைத் தயாரித்துவழங்கும் கானம் கலைக்கூடமும், இணையப்பரப்பிற்கு வெளியேயுள்ள சில நண்பர்களும் இணைந்து, இப்போட்டியை நடாத்துகின்றார்கள். போட்டியில் தெரிவாகும் முதல் மூன்று படங்களுக்கு, சிறப்புப் பரிசுகள் வழக்கபடும். இதற்குத் தொடர்பாளானாக நான் செயற்படுகின்றேன்.

எல்லோர்க்கும் எட்டாக்கனியாக இருந்த பல தொழில்நுட்பங்களும், விஞ்ஞானத்தின் அபரிமித வளர்ச்சியால், இலகுவாக எம் பாவனைக்கு வந்துள்ளது. இந்தவகையில், கருத்தைக்காட்சியாகத் தரும் ஒளிப்படத் துறைசார்ந்த பல்வேறு வடிவங்களில், குறும்படம் எனும் பகுப்பு எங்கள் ஆர்வங்களுக்கு வடிகாலாக வருகிறது. இரண்டுவரிகளில் இணையற்ற கருத்துக்களை வழங்கும் தமிழ்மறையாம் திருக்குறளினைப் போன்று, மிகக்குறைந்த நேரத்தில் கருத்தை வலியுறுத்தும் இவ்வடிவத்தில் நடாத்தப்படும் இப்போட்டியை குறள்படப்போட்டி என விழித்தோம்.
இதில் நீங்கள் கூடக்கலந்துகொள்ளலாம். உங்களிடம் எண்ணமும் விருப்பும் இருக்கிறது. ஆனால் ஒளிப்படக்கருவியெல்லாம் இல்லை என ஏங்குகின்றீர்களா? உங்களிடம் தெளிவுறப் படம்பிடிக்கக்கூடிய கருவியுள்ள செல்லிடத்தொலைபேசியிருந்தால், அதன் மூலம் கூடப் படமாக்கி, முயற்சிக்கலாமே. இதைப் படமாக்கவும், தொகுக்கவும், கொஞ்சம் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் போதும். தேவையான சில மென்பொருட்கள் (உதாரணமாக: தொலைபேசியில் எடுக்கும் படங்களை கோப்புக்களாக மாற்றுவதற்குரிய மென்பொருட்கள்)இணையத்தில் இலவமாகவே தரவிறக்கம் செய்யமுடியும். இன்னும் என்ன தாமதம் உடனே உங்கள் பெயர்களை முலில் பதிவு செய்யுங்கள். பின் படைப்பினை அனுப்புங்கள். எல்லாம் ஒரு முயற்சிதானே..?
போட்டிக்கான விதிமுறைகள்.

தலைப்பு: வானமே எல்லை. உங்களுக்கு விருப்பமான எந்தவொரு
விடயத்தைப்பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால் அவை எமது
சமூக முன்னேற்றங் குறித்ததாகவிருப்பது விரும்பத்தக்கது.
அரசியல், பாலியல்உறவு, சம்பந்தமான கருப்பொருட்கள்
உள்ளடக்கிய படைப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

நேரம்: 1 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.

கோப்பு: MPEG கோப்புக்களாகவும் 5 MB மேற்படாதவகையிலும்
இருக்கவேண்டும்.

போட்டி முடிவுத் திகதி: 30.04.2007 க்கு முன் படைப்புக்கள் அனுப்பி
வைக்கப்படவேண்டும்.

போட்டி முடிவுகள்: 14.05.007 அறிவிக்கப்டும்.

படைப்புக்கள் யாவும், முடிவுத்திகதிக்கு முன்னதாக மின்மடல் மூலம் அனுப்பி வைக்கவேண்டும். ஒருவர் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். படைப்புக்கள் முன்னர் எங்காவது வெளியிடப்பட்டதாக இருக்கக் கூடாது. போட்டியில் கலந்துகொள்ளத் தெரிவுக்குழுவினரால் தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும், கானம் கலைக்கூடத்தினரால் இணையத்தில் காட்சிப்படுத்தப்படும். அதற்கான ஒப்புதலுடனேயே, படைப்பாளர் தமது படைப்புக்களை அனுப்ப வேண்டும். போட்டி குறித்த எந்தவொரு நேர்முகத்தொடர்புகளும் மேற்கொள்ளப்படமாட்டாது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

இந்நிகழ்ச்சி குறித்த அறிவித்தல் சென்றவாரமே, எனது இணையத்தளத்தில் வெளியாயிற்று. நண்பர்கள் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்த் தொடங்கிவிட்டார்கள். நீங்களும் பதிவு செய்யலாமே...
பதிவு செய்ய: ganam.team@gmail.com

Posted byமலைநாடான் at 13 comments  

இணையத்தில் இன்பத்தமிழ் 11

வணக்கம் நண்பர்களே!

ஐரோப்பியத்தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகிய " இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.

இவ்வார நிகழ்ச்சியில், தமிழில் தட்டெழுத்துவது எப்படி எனும் முனைவர் நா.கண்ணன் அவர்களின் விளக்கவுரையின் முதற்பகுதி.

குரல் நடிப்பும், தென்அமெரிக்க இசைக்கோப்பும் கலந்த, இனிமையான ஒரு தமிழ் சினிமாப்பாடல்.

இவ்வார அறிமுகத்தில் லிவிங்ஸ்மைல் வித்யாவும், அவரது ஸ்மைல் பக்கமும்.

ஆகிய சிறப்பம்சங்களுடன் ஒலிக்கிறது.

நிகழ்ச்சியைக் கேட்டு, உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

இணையத்தில் இன்பத்தமிழ் 11.mp...


இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலுள்ள செயலியிலும் கேட்கலாம்.



குறும்படப்போட்டி,

நண்பர்களே! நீங்கள் ஒரு குறும்பட ஆர்வலரா? . உங்களிடம் ஒளிப்படப் பதிவுக்கருவியுடன் கூடிய செல்லிடத்தொலைபேசி இருக்கிறதா? அப்படியானல் நீங்களும் கூட, இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். அறிய, இங்கே வாருங்கள்.

Posted byமலைநாடான் at 3 comments  

இணையத்தில் இன்பத்தமிழ் 10

வணக்கம் நண்பர்களே!

ஐரோப்பியத்தமிழ் வானொலியில் பிரதி ஞாயிறு தோறும், ஐரோப்பிய நேரம் மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகும், " இணையத்தில் இன்பத்தமிழ் " வாராந்திர நிகழ்ச்சியின் இன்றைய ஒலிபரப்பின் ஒலிப்பதிவு இது.

இன்றைய நிகழ்ச்சியில்,

தமிழ் இணையப் பரப்புத் தொடர்பான தொடர் உரையாடலில், தேடுபொறித் தன்மை மிக்கத் தமிழ்த்தளமாகிய லங்காசிறி. கொம் , பற்றிய சிறு குறிப்பு.

இலங்கை விமானப்படை தலைமையகம் மீதான, விடுதலைப்புலிகளிக் வரலாற்றுச் சிறப்புமிக்க வான் தாக்குதல் பின்னான உணர்வலைகளுடனான கவிதை.

சிலப்பதிகாரக் கானல்வரிப்பாடல்.

இவ்வார வலைப்பதிவர் அறிமுகத்தில் சிறப்பு அறிமுகமாக, எட்டுவயதில் புலத்தி (நோர்வே) லிருந்து வலைப்பதிவு செய்து வரும், குட்டிப்பெண் அஞ்சலியின் அறிமுகமும் செவ்வியும் என்பன வருகின்றன.

நிகழ்ச்சியில் அவரது கவிதையை இணைத்துக்கொள்ள அனுமதியளித்த, பதிவர் ரேகுப்தி அவர்களுக்கும். குட்டிப் பதிவர் அஞ்சலியின் செவ்வியைப் பெற ஒத்துழைப்பு நல்கிய அவரது பெற்றோர்களுக்கும், எனைய உதவிகள் புரிந்த நண்பர்களுக்கும், மிக்க நன்றிகள்.

நிகழ்ச்சியைக் கேட்டுச் சொல்லுங்கள்.

இணையத்தில் இன்பத்தமிழ். 10.mp...





இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலுள்ள செயலியிலும் கேட்கலாம்.

Posted byமலைநாடான் at 5 comments